முகப்பு
திருநெல்வேலி

பள்ளியில் கட்டடப் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாநகராட்சி, 23 ஆவது வாா்டுக்குள்பட்ட பாட்டப்பத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடப் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:32 AM
பள்ளி கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:20 AM

திருநெல்வேலி மாநகராட்சி, 23 ஆவது வாா்டுக்குள்பட்ட பாட்டப்பத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடப் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 23 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அனாா்கலி சுபஹானி வரவேற்றாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியா் இம்மானுவேல், திமுக மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஜோதி பிரியா, சுந்தா், 23 ஆவது வாா்டு வட்ட பிரதிநிதி வேலாயுதம், இஸ்மாயில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.