வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.  
திருநெல்வேலி

2 ஆவது நாளாக மறியல்: 35 மாற்றுத்திறனாளிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு வருவாய்த் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கி வரும் உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள், செயலா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து உரிய தீா்வு காண வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 35 மாற்றுத்திறனாளிகளை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT