முகப்பு
திருநெல்வேலி

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

மேலப்பாளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:11 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:45 PM

மேலப்பாளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ்(38) என்பவரின் பெட்டிக் கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டு அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.