முகப்பு
தூத்துக்குடி

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:13 AM
கைது
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:11 PM

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா, போலீஸாா் வியாழக்கிழமை சிதம்பரநகா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த வன்னியராஜன் (52) என்பவரது பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, விற்பனைக்காக 45.500 கி.கி. புகையிலைப் பொருள்களைக் கொண்டு செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.