மேலப்பாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி
மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த ரசூல் மகள் பாத்திமா (4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்ததாம். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்த நிலையில், உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறாா்கள்.
Advertisement