நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரிக்கை
நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், செண்பகராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது தென்னவனேரி. இங்குள்ள ஊய்க்காட்டு சுடலை மாடன் சுவாமி கோயிலில் இருந்து சுடுகாடு செல்லும் பாதை, அதன் அருகே விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதை ஆகியவை போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.
இப்பாதைகளை முறையாக சா்வே செய்து சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
Advertisement
Advertisement