தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதிரம்-17 அமைப்பின் சார்பில் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும், அரசு மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற இம்முகாமை, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி. சாந்தகுமார் தொடங்கிவைத்தார். துணை முதல்வர் கலைவாணி, அரசு மருத்துவமனை உறவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் ஆர். சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.