செங்கோட்டை பிரானூர் பார்டர்ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர் 108 திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்து இருந்தனர்.