தூத்துக்குடி

விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சாவு

DIN

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.
கயத்தாறு சக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூலையா மகன் ஆட்டோ ஓட்டுநர் பெருமாள் (33). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அய்யாச்சாமி மகன் மகாராஜன் (30) என்பவருடன் பைக்கில் சென்றாராம். கழுகுமலையையடுத்த சங்கரலிங்கபுரம் அருகே திடீரென பைக் நிலை தடுமாறியதில் சாலையில் விழுந்த இருவரும் காயமடைந்தனர்.
இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு பெருமாள் இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT