தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண் அடித்துக் கொலை: தொழிலாளி சரண்

DIN

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மனைவி செண்பகவல்லி (38). இறைச்சிக் கடை நடத்தி வரும் மாயாண்டி, வழக்கம்போல திங்கள்கிழமை அதிகாலை கடைக்குச் சென்றுவிட்டார். செண்பகவல்லி வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது, அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த தொழிலாளி அம்பிகாபதி (41) உருட்டுக் கட்டையுடன் சென்று செண்பகவல்லியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்துக்குச் சென்ற அம்பிகாபதி, முன்விரோதம் காரணமாக செண்பகவல்லியை கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்தார்.
மாயாண்டி-செண்பகவல்லி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், வடபாகம் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகையின்போது வீட்டு முன் பட்டாசு வெடித்தது தொடர்பாக அம்பிகாபதிக்கும், செண்பகவல்லிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இக்கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT