தூத்துக்குடி

திருச்செந்தூரில் கார், ஆட்டோக்கள் சேதம்

DIN

திருச்செந்தூரில் வீடுகளின் முன்பு நிறுத்தியிருந்த கார் மற்றும் ஆட்டோக்களை நள்ளிரவில் சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் (41), கிருஷ்ணசாமி (42), சண்முகம் (35) மற்றும் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தவசிராஜன் (45) இவர்களது கார் மற்றும் ஆட்டோக்களை தங்களது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் மற்றும் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரின் கோயில் காவல் ஆய்வாளர் பெரி. லட்சுமணன் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உதவிகளுடன் வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT