ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீ சோமநாத சுவாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி நான்கு நாள்கள் பிரார்த்தனை நடைபெற்றது.
பௌர்ணமி கிரிவல குழு சார்பில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தினமும் மாலை பஞ்சாட்சர மந்திர பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.