தூத்துக்குடி

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் பரமராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும்,கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இளையரசனேந்தல் சுரங்கப் பாதை அருகே இருபுறமும் உடனடியாக அணுகுசாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தினர் கோஷமிட்டனர். கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில்,கட்சியின் நகர துணைச் செயலர்கள் சங்கரப்பன்,முனியசாமி, சரோஜா, அலாவுதீன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் ஜோசப், முத்துப்பாண்டி, செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT