தூத்துக்குடி

காமராஜ் கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, கன்னியாகுமரி பிரிவுத் தலைவர் வெண்ணிமாலை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தொடக்கிவைத்தார். முகாமின்போது, 30 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும், விவேகானந்தரின் 154ஆவது ஜெயந்தி விழாவையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
. நிகழ்ச்சியில், சேவா பாரதி மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள், மருத்துவர்கள் ருக்மணி, ராமசாமி, சேவா பாரதியின் மாவட்ட இணைச் செயலர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆ. தேவராஜ், சேவா பாரதி பொறுப்பாளர்கள் சந்திகணபதி, துரைப்பழம், காளிராஜ், ராமச்சந்திரன் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT