தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆதியோகி சிவன் ரத ஊர்வலம்

DIN

கோவில்பட்டியில் ஈஷா யோக மையம் சார்பில், ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் சனிக்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சுமார் 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிவன் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஈஷா யோக மையம் சார்பில் ஆதியோகி சிவன் ரதம் கோயம்புத்தூரில் இம்மாதம் 5ஆம் தேதி புறப்பட்டது. இந்த ரதம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டி நகருக்கு வந்தது.
கோவில்பட்டி தெற்கு பஜாரில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை இந்த ரதம் தெற்கு பஜாரிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கு புறப்பட்டது.
இந்த ரத ஊர்வலத்தை டி.எஸ்.பி. முருகவேல் தொடங்கிவைத்தார். இதில், கோவில்பட்டி ஈஷா யோக மைய நிர்வாகிகள், அன்பர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT