தூத்துக்குடி

மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாவு

DIN

திருச்செந்தூர் அருகே நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில்,  ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.
திருச்செந்தூர் தோப்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் நயினார் (63). இவர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு திங்கள்கிழமையன்று பகலில் தனது இரு சக்கர வாகனத்தில்  வீடு திரும்பி கொண்டிருந்தார். திருச்செந்தூர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கந்தசாமிபுரம் விலக்கு அருகேயுள்ள இசக்கியம்மன் கோயில் பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதாம்.  இதில்  பலத்த காயமடைந்த நயினார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT