தூத்துக்குடி

கார்-பைக் மோதல்: கட்டட தொழிலாளி சாவு

DIN

காயல்பட்டினத்தில் பைக்  மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
ஆறுமுகனேரி அருகிலுள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த வளன் அரசு மகன் பிபாகரன்(26).  கட்டட  தொழிலாளியான இவரும், இவரது நண்பர்களும் பைக்கில் திருச்செந்தூருக்கு சென்று விட்டு , காயல்பட்டினத்துக்கு சென்ற போது, அங்குள்ள  தனியார் கல்லூரி அருகில் இவரது பைக்  கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு , காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தார்.           காரில் இருந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது ரபீக் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT