முகப்பு
தூத்துக்குடி

நவ. 24 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி,  நவம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு,  விவசாயிகள் குறைதீர் கூட்டம் இம்மாதம் 24 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.  
இந்தக் கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்களும்,  பாசன சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →