தூத்துக்குடி

விளைநிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பியை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

சாத்தான்குளம் அருகே விவசாய நிலம் வழியாக தாழ்வாகச் செல்லும் மின்கம்பியை மாற்றி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலமீரான்குளத்தில் குளக்கரையோரம் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள விவசாய பம்புசெட் மற்றும் பொதுமக்களுக்கு மின்விநியோகிக்கும் வகையில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகள் கடந்த 4 மாதங்களாக தாழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. புகார் தெரிவித்தும் அதை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ளாததால், போதிய மின்வசதியின்றி அப்பகுதியில் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் மீரான்குளம் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலிலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT