தூத்துக்குடியில் 2018 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு 2018 விளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு 2018 விளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள நாடார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, உலக நன்மை வேண்டி 2018 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
ஏற்பாடுகளை கோயில் தலைவர் செண்பகராஜ், துணைத் தலைவர்கள் பாஸ்கரன், பாலகிருஷ்ணன், செயலர் பொன் தனராஜ், பொருளாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.