நாகலாபுரம் அரசு கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கு
நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மரபு சார் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மரபு சார் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் யோ. தர்மராஜ் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் கணபதிராஜன் வரவேற்றார்.
எழுத்தாளர் சோ. தர்மன், பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் ஆகியோர் அறிவியல் சார்ந்த நீர் மேலாண்மை, கல்வெட்டுகள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற நீர் மேலாண்மை சான்றுகள் குறித்து பேசினர். கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் சு. விவேக லதா, சு. அசோக்குமார், செ. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.