மணல் கடத்தல்: லாரி பறிமுதல்; ஓட்டுநர் கைது
ஆத்தூர் அருகில் மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.
ஆத்தூர் அருகில் மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.
ஆத்தூர் அருகில் முக்காணி ஆற்றுப்பாலத்தில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பச்சமால் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது லாரியில் மணல் கடத்தியதாக அதன் ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் நடுச்சல் புதுவல் புத்தன் தெரு ராஜேந்திரன் மகன் ஜோலிமோனை(42) போலீஸார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் நடுச்சல் பகுதியைச் சேர்ந்த கென்னடி மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.