பெரியபுரம் கோயிலில் ஏப்.22இல் வருஷாபிஷேகம்
உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.
உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மங்கள இசை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜை, திருமுறைப் பாராயணம், அன்னதானம், 9 மணிக்கு கும்பம் எழுந்தருளல், 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கு மகா அபிஷேகம், கும்பாபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகி டி.கார்த்தீசன் செய்து வருகிறார்.