முகப்பு
தூத்துக்குடி

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான  கூலியை உயர்த்தக் கோரி மறியல்

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான கூலி யை உயர்த்த வலியுறுத்தி, இலுப்பையூரணி பகுதி தீப்பெட்டித் தொழிலாளர்கள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான கூலி யை உயர்த்த வலியுறுத்தி, இலுப்பையூரணி பகுதி தீப்பெட்டித் தொழிலாளர்கள் கடலையூர் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் தெரிந்தவுடன் டி.எஸ்.பி. ஜெபராஜ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் ஆகியோர் அங்கு சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசி கூலி யை உயர்த்த வழிவகை செய்யப்படும் என்றும்,  இதுகுறித்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்படும் என்றும், மறியலை கைவிடுமாறும் அறிவுறுத்தினர்.  அதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →