முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கோயிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், இளநீர், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜையை கோயில் அர்ச்சகர்கள் நயினார், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →