சித்ரா பௌர்ணமி: கட்டாரிமங்கலம் கோயிலில் சப்பர பவனி
கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சப்பரபவனி நடைபெற்றது.
கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சப்பரபவனி நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் காலையில் சிறப்பு ஹோமம் , அபிஷேக ஆராதனை நடைபெற்றன. சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கோயிலில் திருவாசக முற்றோதல், மகேஸ்வரபூஜை நடைபெற்றது.