தூத்துக்குடி

தூத்துக்குடியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருப்பூர் மருத்துவர்களை கண்டித்து,  தூத்துக்குடியில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம்,  வெள்ளக்கோவிலில் செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேஷன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
 ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலர் ராமமூர்த்தி,  நிர்வாகிகள் தங்கவேல், விஜயகுமார், ஆண்டிச்சாமி,  மகாராஜன் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT