தூத்துக்குடி

பிறப்பு, இறப்பு சான்றிதழ் காலதாமதமின்றி வழங்கக் கோரிக்கை

DIN

கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். 
இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியச் செயலர் ஆணிமுத்துராஜ் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.பாஸ்கரன், மாவட்ட தொண்டரணிச் செயலர் தனபாலன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பூமிபாலகன் உள்ளிட்ட பலர் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். 
பின்னர், வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயத்திடம் அளித்த மனு:  பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டி கோட்டாட்சியரிடம்  கடந்த  ஓர் ஆண்டாக மனு அளித்தும் தற்போது வரை எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. 
பிறப்பு, இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் பள்ளி, கல்லூரிகளில் அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கும், உயர்கல்வி தொடருவதற்கு சிரமம் ஏற்படுகிறது.  எனவே, உரிய விசாரணை செய்து காலதாமதமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அதற்கான உரிய ஆவணங்கள் இல்லையென்றால் விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுரை வழங்கி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT