தூத்துக்குடி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா

DIN

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு, பள்ளிச் செயலர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். பொருளாளர் ரத்தினராஜா, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தாழையப்பன்,  முருகன்,  தங்கமணி,  பால்ராஜ்,  மனோகரன்,  செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளி முதல்வர் தேன்மொழி தலைமையில் ஆசிரியர்கள்,  மாணவர், மாணவிகள் ஒருங்கிணைந்து பொங்கலிட்டனர். மாணவர், மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.  அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வென்று தங்கப்பதக்கம் பெற்ற இப்பள்ளி 3ஆம் வகுப்பு மாணவர் சந்தீபனைபாராட்டி, பள்ளி நிர்வாகம் சார்பில் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.  தொடர்ந்து,  மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற உறியடி விளையாட்டு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT