விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்
விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலர் பாண்டியன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் பழனிமுத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் விளாத்திகுளம் கிளைத் தலைவராக பொன்னுச்சாமி, துணைத் தலைவராக சுப்பையா, செயலராக நாராயணன், இணைச் செயலராக சுகர்ணமூர்த்தி, பொருளாளராக ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களாக குமாரசாமி, துரைராஜ் ஆகியோரும், மாவட்டக் குழு உறுப்பினர்களாக 8 பேரும், வட்ட செயற்குழு உறுப்பினர்களாக 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள், துறைரீதியான நடவடிக்கைகள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலன்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.