மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (22). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (20). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் தனது உறவினர் கட்டி வரும் புதிய வீட்டின் பணிகளை கவனித்து வந்த விக்னேஷ், புதன்கிழமை மாடியில் ஏறி பலகைகளை எடுத்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.