கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி புத்துயிர் ரத்த தானக் கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு புத்துயிர் ரத்த தான கழகச் செயலர் க. தமிழரசன் தலைமை வகித்தார். நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம் முன்னிலை வகித்தார்.
இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர் முகாமை தொடங்கிவைத்தார். மருத்துவர் விக்னேஷ் தலைமையிலான குழுவினர் முகாமில் பங்கேற்ற 65 பேருக்கு கண் சிகிச்சை அளித்தனர். அதில் 14 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில், ஆவல்நத்தம் விவசாயிகள் சங்கத் தலைவர் லட்சுமணன், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், கணேஸ்வரி, லட்சுமி, விஜயராமச்சந்திரன், அத்தைகொண்டான் அதிமுக கிளைச் செயலர் ஒளவையார் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.