தூத்துக்குடி

இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

DIN

திமுக தலைவர் மு.கருணாநிதி மரணமடைந்த செய்தியை அறிந்து, அதிர்ச்சியில் இறந்த சாத்தான்குளம் தொழிலாளியின் குடும்பத்துக்கு திமுக சார்பில்  ரூ. 2 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்  அருகே உள்ள  கடாட்சபுரத்தைச் சேர்ந்தவர்  திமுக தொண்டர் எட்வின்தனராஜ்.  கருணாநிதியின்  இறந்த செய்தியை கேட்ட அவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.  அவருக்கு,  திமுக தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 
இந்த நிதியை  எட்வின்தனராஜ் மனைவி அமுதாஷீலாவிடம்  தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சத்துக்கான  காசோலையை தூத்துக்குடி தெற்கு  மாவட்ட திமுக செயலர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ  செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,  ஒன்றிய திமுக செயலர்கள் சாத்தான்குளம்  ஆ.செ. ஜோசப் உடன்குடி பாலசிங் , சாத்தான்குளம் நகரச்செயலர்  மகா. இளங்கோ,  வழக்குரைஞர் கிருபா,  மாவட்டஇளைஞரணி துணைஅமைப்பாளர் ராமஜெயம், நெசவாளர்அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு மாவட்டப்பிரதிநிதி லெ.சரவணன் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT