தூத்துக்குடி

சட்ட விரோதமாக மது விற்பனை: இருவர் கைது

DIN

கயத்தாறில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார்,  அவர்களிடமிருந்த  24  மதுபாட்டில்கள் மற்றும் ரூ.250-ஐ பறிமுதல் செய்தனர்.  
கயத்தாறு காவல் உதவி- ஆய்வாளர் முத்துமாரி தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை சன்னதுபுதுக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த அதே பகுதி பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த சு.சுடலைமுத்துவை (50) கைது செய்த போலீஸார்,  அவரிடமிருந்த 11 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.100-யை பறிமுதல் செய்தனர். 
அதுபோல, ராஜாபுதுக்குடி பகுதியில் உள்ள ஹோட்டலுக்குப் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் கண்ணனை (50) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.150-யை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT