தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த 22 பேர் மீது வழக்கு

DIN

சாத்தான்குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 22 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். 
சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி மனைவி சிவசக்தி (48). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஜீவன்ராஜ், மோகன்ராஜ், முருகராஜ் உள்ளிட்டோர் பிரச்னைக்குரிய இடத்தில் திங்கள்கிழமை நுழைந்துள்ளனர். இதை கண்டித்த சிவசக்தியை அவர்கள் அவதூறாக பேசி, தாக்கியதுடன் கொலைமிரட்டல் விடுத்தனராம். தாக்குதலில் காயமடைந்த சிவசக்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி, ஜீவன்ராஜ், மோகன்ராஜ், முருகராஜ், ரவிச்சந்திரன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT