தூத்துக்குடி

பாட்டக்கரை பத்ரகாளியம்மன் கோயிலிலில் 4,508 திருவிளக்கு பூஜை

DIN


குரும்பூர் அருகே பாட்டக்கரையில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயிலிலில் 4,508 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலிலில் தமிழ் மாதம் 2ஆவது செவ்வாய்க்கிழமை தோறும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை 4,508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை சந்திரம்மா, பக்திப் பாடல்கள் பாடி தொடக்கிவைத்தார். 
இதில் திருநெல்வேலி, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT