தூத்துக்குடி

கோவில்பட்டி மகாராஜா கோயிலில் பூக்குழி திருவிழா

DIN

கோவில்பட்டி ஸ்ரீ சிவசக்தி பத்ரகாளியம்மன் ஸ்ரீ மலையாளத்து சுடலைமகாராஜா கோயிலில்  கொடை விழாவையொட்டி பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. 
இதையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வெண்கல அக்னிச்சட்டி வளர்த்து சுவாமி ஊர் விளையாடுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. 
2 ஆம் நாளன்று காலையில் மகா கணபதி ஹோமம், வேள்வி பூஜைகள், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை, மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பு, உச்சிகால பூஜை, அன்னதானம், மாலையில் பூரண கும்ப முளைப்பாரி ஊர்வலம், வெண்கல அக்னிச் சட்டி எடுத்து சுவாமி ஊர் விளையாடி வருதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், நள்ளிரவில் சாமக்கொடையை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் ஆகியவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT