தூத்துக்குடி

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச மாதிரி தேர்வு

DIN


சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற  குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 பதவிக்கான எழுத்துத் தேர்வு, செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. 
இந்தத் தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மையங்களில் இலவச மாதிரி தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 
தூத்துக்குடி மையத்தில் நடைபெற்ற தேர்வின்போது, தேர்வை எதிர்கொள்வது, நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது குறித்து அகாதெமி நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் விளக்கம் அளித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மாதிரி தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரம் தேர்வு எழுதியவரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT