தூத்துக்குடி

கீழஈராலில் சிறப்பு குறைதீர் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

எட்டயபுரம் வட்டம், கீழஈராலில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

DIN

எட்டயபுரம் வட்டம், கீழஈராலில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில்,  சமூக நலத்திட்ட உதவிகள், வாருகால், தார்ச்சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து,  விரைந்து  தீர்வு காண ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து கீழ ஈரால் கிராமத்தில் உள்ள வேல் வெள்ளைச்சாமி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 
மாணவ -மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை பார்வையிட்டார். சத்துணவு மையத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தினை பரிசோதித்தார். அப்போது,  துணை வட்டாட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT