தூத்துக்குடி

மதுக்கூடத்தில் தகராறு: கட்டடத் தொழிலாளி கைது

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள மதுபானக்கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார். 

DIN

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள மதுபானக்கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார். 
கோவில்பட்டி, இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் அரசுப்பாண்டியன்(42). கட்டடத் தொழிலாளி. இவர், கடலையூர் சாலையில் உள்ள மதுபானக் கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். அப்போது  அவரிடம், வள்ளுவர் நகர் சிவாஜி நகரைச் சேர்ந்த துரைப்பாண்டி மகனான மற்றொரு கட்டடத் தொழிலாளி அனந்தமாரியப்பன்(36) மதுக்குடிக்க பணம் கேட்டாராம். அதற்கு அரசுப்பாண்டியன் மறுத்தாராம். உடனே, அவரை அனந்தமாரியப்பன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,  அனந்தமாரியப்பனை புதன்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT