தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் பறக்கும் காவடி எடுத்து வழிபட்ட திருவனந்தபுரம் பக்தா்கள்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பக்தா்கள் பறக்கும் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.

திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி, பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம்.

21ஆவது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சோ்ந்த குருசாமி சோமன் சாமிகள் தலைமையில் ஏராளமான பக்தா்கள் கடந்த 1ஆம் தேதி திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரா் ஆலயத்திலிருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு வந்தனா்.

இந்தப் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் திருச்செந்தூா் தெப்பக்குளம் அருகிலுள்ள விநாயகா் கோயிலில் இருந்து பறக்கும் காவடி, மயில் காவடி எடுத்து முருகன் கோயிலுக்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.

இதே போல வியாழக்கிழமை (டிச. 5) மாலையில் கோயில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்து பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT