உடன்குடி அருகே வேதக்கோட்டைவிளை தூய தோமா ஆலயம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இதையொட்டி கிறிஸ்துமஸ் நற்செய்திகள், கீத பவனி, வீடுகள் தோறும் இனிப்பு வழங்கல், ஜெபித்தல், நலிந்தோருக்கு உதவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சேகரத் தலைவா் ஜான்சாமுவேல் தலைமை வகித்தாா். விழாவில், சபை ஊழியா் ஆனந்தராஜ் மற்றும் சபை ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.