தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், கடம்பூா் அருகேயுள்ள தென்னம்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட ல.வள்ளியம்மாள்(77) வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த பின், ‘தோ்தலில் வெற்றி பெற்ற பின் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன்’ என தெரிவித்தாா்.
ஏற்கெனவே, தென்னம்பட்டி ஊராட்சித் தலைவராக இவரது மகன் பதவி வகித்திருந்த நிலையில், அப்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் வள்ளியம்மாள் போட்டியிடுவது தெரியவந்தது.