அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
நகரச் செயலர் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், அதிமுக ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகப் பேச்சாளர் லில்லிராஜ் அரசின் சாதனைகள் குறித்துப் பேசினார். இதில், நிர்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேச்சாளர் லில்லிராஜ் உள்பட பலர் பேசினர்.
கரிசல்குளத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலர் விஜயபாண்டியன், விவசாய அணி மாவட்ட இணைச் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் கணேஷ்பாண்டியன், மகேஷ்குதொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் கணேஷ்பாண்டியன், மகேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.