காஷ்மீரில் ராணுவ வீரர்களின் மீதான தாக்குதலுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலர் இ.முஹம்மது வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் கொடும் தாக்குதலை யார் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். மனித உயிர்களின் மதிப்பு தெரியாத மிருகங்களின் கொடூர செயலாகவே இதைப் பார்க்க வேண்டும். தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு தகுந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.