தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் பொறுப்பேற்பு
தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயராக ஸ்டீபன் அந்தோணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயராக ஸ்டீபன் அந்தோணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ தூத்துக்குடி மறை மாவட்ட ஆயராக இருந்த இவோன்அம்புரோஸ் உடல்நிலை காரணமாக பணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய ஆயராக வேலூர் மறை மாவட்டத்தில் பணியாற்றிய ஸ்டீபன்அந்தோணி நியமனம் செய்தார். தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ஆயர் ஸ்டீபன்அந்தோணியை பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து அலங்கரித்த வாகனத்தில்ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஊர்வலம் தூத்துக்குடி திரு இருதயங்களின் பேராலய வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போஸ்தலிக்க பரிபாலகரான முன்னாள் ஆயர் இவோன்அம்புரோஸ் புதிய ஆயர் ஸ்டீபன் அந்தோணிக்கு திருநிலைப்படுத்தி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், தமிழகம் முழுவதும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவப் பேராயர்கள், தூத்துக்குடி மாநகர கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.