தூத்துக்குடி

கோவில்பட்டியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

DIN

கோவில்பட்டியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இரு இளைஞர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 
இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் உலகு என்ற உலகுராஜ்(20). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 
இந்நிலையில், கடந்த டிச. 21ஆம் தேதி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி மனைவி வெயிலாச்சியை கொல்ல முயன்றதாக  கைது செய்யப்பட்டார். அதுபோல,  சன்னதுபுதுக்குடியைச் சேர்ந்த பால்தங்கச்சாமி மகன் ராஜா(32) என்பவர் சொத்துப் பிரச்னையில் உறவினர் ராஜன்கோயில் பிள்ளை என்பவரை கடந்த டிச.21இல் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். 
இவ்விருவரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,  மாவட்ட எஸ்.பி. மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி. யின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  உத்தரவுப்படி, உலகு என்ற உலகுராஜும், ராஜாவும் சிறையில் குண்டர் தடுப்புக் காவல் பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT