மார்கழி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு, கோவில்பட்டி இந்து நல்வழி மன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பஜனையில் பங்கேற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்ற ஆலோசகர் வீரபெருமாள் தலைமை வகித்தார். மன்ற இயக்குநர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தார். செயலர் ராமசாமி ஆன்மிக உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மன்ற ஆசிரியர்கள் கார்த்திக், சங்கர், கீதாசத்யவேல், மணிகண்டன், ராமசந்திரன், சுகந்தி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.