தூத்துக்குடி

ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் தைப்பூச விழா

DIN

சாத்தான்குளம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, காவடி பிறை முருக பக்தர்கள் விரதமிருந்து  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தீர்த்தம் எடுத்து  காவடி பிறை முருகன் கோயிலை வந்தடைந்தது. 
இதையடுத்து, கணபதி ஹோமம், காவடி பிறை முருகப் பக்தர்கள் பஜனை பாடி கோயிலை வலம் வந்தனர்.  தொடர்ந்து முருகனுக்கு கும்பாபிஷேகம், 108 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் புஷ்பங்களால் அலங்கரிக்கப் பட்டு தீபாராதனை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இரவில் சாயரக்சை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, அலங்கார  தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT