தூத்துக்குடி

ஜூலை 16இல் சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

DIN

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை  16) பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நள்ளிரவுக்கு பின் 1.37 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4.29 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு பள்ளியறை பூஜைகளாகி, நடைசாத்தப்பட்டு, மறுபடி திறக்கப்பட்டு விஸ்வரூப பூஜையாகி சுவாமிக்கு பட்டு சாத்தி வைக்கப்படும்.
 பின்னர் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT